வழக்குகளில் வெற்றி பெற!
ADDED :4039 days ago
மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ
தௌர்பாக்யநாஸந:
ப்ரதிவாதி முகஸ்தம்ப:
துஷ்டசித்த ப்ரஸாதந:
பொறாமை, வெறுப்பு, சகிப்பின்மை, போன்ற பிறரின் தீய எண்ணங்களால் ஏற்படுகின்ற துன்பங்கள், வம்பு, வழக்குகள் பல. இப்படி, பொய்யாய் தொடரப்பட்ட வழக்கு, நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டதனால் ஏற்பட்ட விவகாரம், நிலம் தொடர்பான சிக்கல்... இப்படி எந்த வகையில் வழக்கு ஏற்பட்டிருந்தாலும், அதற்குப் பலனளிப்பது இந்த ஸ்லோகம். இதை தினமும் 18 முறை வீதம் ஒருமித்த மனத்துடன் கூறி வந்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.