உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தியில் தேரோட்டம்!

காளஹஸ்தியில் தேரோட்டம்!

திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தியில், நேற்று காலை தேரோட்டம், வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீகாளஹஸ்தியில், கடந்த ஆறு நாட்களாக, மகா சிவராத்திரியை ஒட்டி, வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, லிங்கோத்பவர் தரிசன சேவை துவங்கியது. லிங்கோத்பவர் தரிசனத்திற்கு, பக்தர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், காளஹஸ்தீஸ்வரரும், ஞானா பிரசூணாம்பிகையும் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வந்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, வடம் பிடித்தனர். இரவு 8:00 மணிக்கு, தெப்போற்சவம் நடந்தது. சிவனும், அம்மையும் கோவில் அருகில் உள்ள நாகாபரண புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தனர்.

தேரோட்டத்தில் நெரிசல்: காளஹஸ்தியில் நடந்த தேரோட்டத்தின்போது, பக்தி பரவசத்துடன், பக்தர்கள் தேர் கயிற்றை, உட்புறமாக நின்றபடி இழுத்தனர். அப்போது, ஒருவர் மீது ஒருவர் மோதி, கீழே விழுந்தனர். உடனே அதிகாரிகள், கயிற்றுக்கு உட்புறம் நின்ற பக்தர்களை வெளியேற்றி, வெளிப்புறமாக நின்று, வடம் பிடிக்க வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !