அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயி ல் உள்ளது. இந்த கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும்,பஞ்ச பாண்டவர்களும் பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.அம்மாவாசை தோறும் இங்கு மிளகாய்வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகு ம்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. நிகும்பலா யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உ பாதை நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.மாசி மாத அம்மாவாசை மற்றும் மகா சிவ ராத்திரி புன்னிய காலமான நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந் து அம்பாளை கோயில்மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.மதியம் 1 மணிக்கு சங்கர் குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார்.இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.