உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் திருத்தேர் திருவிழா

தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் திருத்தேர் திருவிழா

திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடந்த  திருத்தேர் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் அடுத்த தீவனுாரில் பிரசித்து பெற்ற  சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த  21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது .இதையொட்டி தினந்தோறும் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் , சுவாமி வீதியுலா நடந்து வருகின்றது.  பிரம்மோற்சவத்தின் 8 ம் நாளான நேற்று இரவு, பொய்யாமொழி விநாயகருக்கு திருப்பூ நுால் கல்யாணம் நடந்தது. பிரம்மோற்வத்தின் 9 ம்  நாள் நிகழ்ச்சியான இன்று காலை 9.30 மணிக்கு திருத்தேர் நிகழ்ச்சி நடந்தது. கோவிலிருந்து புறப்பட்ட தேர்தேரை, பக்தர்கள் வடம் படித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாளை (30ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 10 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உபயதாரர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !