பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED :3913 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் கொட்டினர். ஏராளமான புடவை மற்றும் துணிகள் சாற்றப்பட்டன. பழ வகைகள், பால், தயிர், நெய்யாக குண்டத்தில் கொட்டி தீபாரதனை நடந்தன. பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.