திருப்பரங்குன்றம் கோயிலில் பாரி வேட்டை திருவிழா!
ADDED :3983 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான குருநாத சுவாமி கோயிலில் பாரிவேட்டை திருவிழா நடந்தது.பிப். 9ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.21 விழா நடந்தது. சங்கிலி கருப்பண சுவாமி உட்பட 21 சுவாமிகளுக்கு பூஜைகள் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பூச்சப்பரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டை சென்றார்.