திருக்கோவிலூர் முருகன் கோவிலில் கிருத்திகை விழா
ADDED :3925 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று கிருத்திகை விழா நடந்தது. காலை 6.00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. ராஜா குருக்கள் பூஜைகளை முன்னின்று செய்தார்.