உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பெண்ணாடம்: பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை அருகே உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மாலை 4:30  மணியளவில் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், இரவு 8:30 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, ÷ நற்று காலை 6:30 மணிக்கு கோ பூஜை, யாக சாலை பூஜை, 7:30 மணிக்கு நாடி சந்தானம், 8:30 மணிக்கு மகா தீபாராதனை, 9:00 மணிக்கு ய õத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு கோபுர கலசத்திற்கும், 9:45 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கும் புனித நீர்  ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !