பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி!
ADDED :3861 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசிமாத தீர்த்தவாரியை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார். மாசிமாத தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று முன்தினம் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிய ளவில் உற்சவர் பெருமாள் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.