திருப்பரங்குன்றம் கோயிலில் தங்க ரதம் புறப்படாது!
ADDED :3963 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.8 வரை நடக்கும் இத்திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை வீதி உலா வருவர். அன்று வரை தங்க ரதம் புறப்பாடு இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.