உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலத்தில் பிரதோஷ வழிபாடு

மயிலத்தில் பிரதோஷ வழிபாடு

மயிலம்: மயிலம் பகுதி சிவன் கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்திலுள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், தீபாராதனை நடந்தது. இதில் ஏரளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார். மயிலம் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கொல்லியங்குணம் சிவன் கோவிலில் நேற்று மாலை சுவாமிக்கு பழவகைகளினால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த மகா தீபாராதனையில் ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இது போன்று செண்டூர், பெரும்பாக்கம், பாதிராபுலியூர், ஆகிய சிவன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !