உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு

அண்ணாமலையார் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நேற்று, அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன.அதிகாலை முதலே, கோவிலுக்கு, பக்தர் அதிகளவில் வருகை தந்து, அண்ணாமலையாளர், உண்ணாமலையம்மனை வழிபட்டு சென்றார். தொடர்ந்து, சிவாச்சாரியார் காலை, 9.30 மணிக்கு, கொடிமரம் அருகில் உள்ள விநாயகர் சன்னதியில், பஞ்சாங்கம் வாசித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !