உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் பகுதியில் புத்தாண்டு வழிபாடு

மயிலம் பகுதியில் புத்தாண்டு வழிபாடு

மயிலம்: மயிலம் பகுதி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணி அபிஷேகத்திற்கு பின்னர், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கிரிவல காட்சி நடந்தது. இது போல் செண்டூர் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், கொல்லியங்குணம் சுந்தர விநாயகர், காளி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தென்பசியார் பாலமுருகன் கோவிலில் நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆலகிராமத்திலுள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !