உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரைகாத்த காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

தரைகாத்த காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

கடலூர்: கடலூர் தரைகாத்த காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கடலூர், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில்  தமிழ் வருட பிறப்பையொட்டி அம்மனுக்கு நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது.  மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு  பூஜை நடந்தது. 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !