ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை!
ADDED :3828 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே காலனி, ஐயப்பன் கோவிலில் மகா தீபாராதனை நடந்தது. விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியிலுள்ள, வரசித்தி விநாயகர் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு, சித்திரை மாத, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 14ம் தேதி காலை 8:00 மணி முதல் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, ஐயப்பனுக்கு, கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.