உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

உடுமலை: உடுமலை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில், பிரதோஷத்தையொட்டி, மாலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்,  எலையமுத்தூர் பிரிவில் உள்ள புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !