உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈசன், இலிங்கமாக இருந்து அருள் புரிதல்

ஈசன், இலிங்கமாக இருந்து அருள் புரிதல்

வாணாசு ரன்பூசை செய்திடும்இ லிங்கத்தெண்
மாகோடி சதம ளவிலை
மன்னும்ஒன் பதுகோடி ஆலயங் கண்டனன்
மருவுதென் இலங்கை வேந்தன்
கோணாமல் ஒருவளவன் நித்தம்ப்ர திட்டைபுரி
கோயில்கோ டிக்க திகமாம்
குவலயந் தன்னில்அடி யர்க்கருள் புரிந்துநீ
கோயில்கொண் டனைய னந்தம்
தூணானை கட்டுதறி மாக்குடைந் திடுகுழவி
தூயநெற் கொளும ரக்கால்
தொகுநெல் லுலக்கைமுத லானவடி வத்தடியர்
தொழுதிட இலிங்க மாகிச்
சேணாடர் தொழநின்று பேரருள் புரிந்தநின்
சீர்க்கருணை பாடல் எளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !