அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைநிகழ்ச்சி துவக்கம்!
தென்காசி : அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் இன்று (2ம் தேதி) கும்பாபிஷேக யாகசாலை நிகழ்ச்சிகள் துவங்குகிறது. கேரள மாநிலம் அச்சன்கோவில் அரசன் ஐயப்பன் கோயிலில் கன்னி மூல கணபதி, நாகர், கிருஷ்ணர், மாளிகைபுரத்தம்மன் உள்ளிட்ட உப தேவதாக்களின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (2ம் தேதி) பிரதிஷ்டா பூஜைகள் துவங்குகிறது. செங்கன்னூர் தாழமன் மடம் தந்திரி பிரம்ம ஸ்ரீ கண்டரு மகேஷ்வரரு தலைமையில் பூஜைகள் நடக்கிறது. காலையில் ஆச்சார்ய வர்ணம், கோ தானம், பஞ்சபுண்யாகம், கணபதி ஹோமம், 25 கலசம், பஞ்சகவ்யம் மற்றும் மதிய பூஜை நடக்கிறது. மாலையில் அம்குர பூஜை, பிரஸாத சுத்தி, கணபதி பூஜை ரக்ஷகலசம், ர÷க்ஷõக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், வாஸ்து பலி, கலசாபிஷேகம், வாஸ்து புண்யாகம் நடக்கிறது. தொடர்ந்து நாளை (3ம் தேதி) முதல் வரும் 5ம் தேதி வரை காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, ஹோமம், கலசாபிஷேகம், மாலையில் அம்குர பூஜை, இரவு பூஜை நடக்கிறது. 6ம் தேதி காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, தத்துவ ஹோமம், தத்துவ கலசம், கலசாபிஷேகம், 25 கலசம், மரப்பாணி, ஜீவகலச பூஜை, மதிய பூஜை, மாலையில் சயன பூஜை, கும்பேஷக்கரி பூஜை, பிரம்ம கலச பூஜை, அதிவாஸ ஹோமம், அதிவாஸ பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான 7ம் தேதி காலையில் கணபதி ஹோமம், மரப்பாணி வாத்திய கோஷத்தோடு திருவீதி எழுந்தருளல், பிரதிஷ்டை, அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் மதிய பூஜை நடக்கிறது.