உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை!

ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை!

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது. கடலூர்  அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று  பால்குடம் ஊர்வலம் நடந்தது. அதனையொட்டி காலை 9:00 மணிக்கு குயவர் வீதியில் உள்ள விநாயகர் கோவிலிலிருந்து  பக்தர்கள் பால்குடங்களை  ஊரின் முக்கிய வீதிகளின்  வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.காலை 9:30 மணிக்கு  உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும்,  காலை 10:30 மணிக்கு பால்குடம் அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !