உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தை பெருமாள் கோவிலில் கருடசேவை, திருக்கல்யாணம்

உளுந்தை பெருமாள் கோவிலில் கருடசேவை, திருக்கல்யாணம்

உளுந்தை: உளுந்தை வெங்கடேச பெருமாள் கோவிலில், கருட சேவையும், திருக்கல்யாணமும் நடந்தது. மப்பேடு அடுத்துள்ளது உளுந்தை ஊராட்சி. இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வெங்கடேச பெருமாளுக்கு கருட சேவையும், ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, காலை 5:30 மணிக்கு கருட சேவையும் நடந்தது. பின், மகா சாந்தி ஹோமமும், அதை தொடர்ந்து மகா சாந்தி திருமஞ்சனமும், விசேஷ தீபாராதனையும் நடந்தது. அதன்பின், மாலை 4:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாளுக்கு ஸ்ரீவாரி திருக்கல்யாணமும், மகோற்சவ உற்சவமும், இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் வீதியுலாவும் நடந்தது. இதில், உழுந்தை கிராமத்தைச் சுற்றியுள்ள வயலுார், மப்பேடு, முதுகூர், ஸ்ரீபெரும்புதுார், தொடுகாடு உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !