பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்!
ADDED :3806 days ago
சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் வரதராஜர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.