உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!

விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!

விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பி கை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று முன்தினம் காலை பால், தயிர், சந்தனம், இளநீர்,  பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம் புல், மலர் மாலைகள் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு  அலங்காரத்தில் ஆழத்து விநாயகர் அருள்பாலித்தார். மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக் கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதேபோல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர்  நர்த்தன விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர், கடலுõர் ரோடு விஜய விநாயகர், பெரியார்  நகர் வினை தீர்த்த சித்தி விநாயகர், செல்வ விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !