உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

பச்சைவாழி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீமன்னாத ஈஸ்வரர், ஸ்ரீபச்சைவாழி அம்மன் கோவில் தேர் திருவிழா  நடந்தது. விழாவையொட்டி  இரவு 10:00 மணிக்கு அம்மனுக்கு சக்தி அழைத்தல், பெண் அழைப்பும் நடந்தது. தொடர்ந்து  2:00 மணிக்கு சுவாமிக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர், சுவாமி வீதியுலா நடந்தது. மறுநாள் பகல் 12:30 மணிக்கு வாமுனீஸ்வரருக்கு  கண் திறப்பு நிகழ்ச்சியும், மதியம் 2:45 மணிக்கு ரத உற்சவமும் நடந்தது. கோவில் பகுதியை சுற்றி வலம் வந்த தேரினை கொணலாவடி,  மூலசமுத்திரம், நத்தகாளி, ஏமம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நுõற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரினை  வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஸ்ரீமன்னாத ஈஸ்வரர், ஸ்ரீபச்சைவாழியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !