புதுச்சேரி ஏழை மாரியம்மன் கோவில் உற்சவம்!
ADDED :3844 days ago
புதுச்சேரி: குயவர்பாளையம் லெனின் வீதி ஏழை மாரியம்மன் கோவில் உற்சவம் நேற்று நடந்தது. காலை 9.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5.00 மணிக்கு சந்தனக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 7.00 மணிக்கு மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை டாக்டர் தில்லை சிதம்பரம் பலர் செய்திருந்தனர்.