உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்!

வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்!

செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு இசைக் கச்சேரியும், வாண வேடிக்கையும் நடந்தது. இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழு வினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !