உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் சாத்தப்படும் மலர்கள்!

அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் சாத்தப்படும் மலர்கள்!

பங்கயம் துளபமா தவிபுன்னை சண்பக
பலாசமொ ழிநவ மல்லிகை
பகர்நந்தி மந்தாரை கைதைமலர் என்னுமிவை
பதுகால சந்தி மலராம்
தங்குகர வீரம்ப லாசமுற் பலமோடு
தண்துள பம்வெண் தாமரை
சாற்றுகோ வீதமலர் ஏகபத் திரமொடு
தழைந்த குரவங் கூவிளம்
பொங்குமுற் பலமலரும் உச்சியம் பொழுதினில்
பூசனைக் குரிய வென்றாய்
புகல்குமுத முல்லைமல் லிகைசாதி கூவிளம்
பூந்த மனமரு வெண்துழாய்
செங்கமல மணவேர் இராப்பொழுதின் அரையிரவு
திகழுட்ட புட்ப மென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !