மாதந்தோறும் பவுர்ணமி நாளில் செய்யும் பூசையும் பயனும்!
ADDED :3851 days ago
மறிமுதல் பங்குனி வரைக்கும்அம் மதிதொறும்
வருப ருவநட் சத்திரம்
மன்னுதின மதின்உரிய பூசைதம னம்கந்தம்
மருவுமுக் கனியி னியபால்
உறுமதுர சர்க்கரை அபூபம் ஓதனபூசை
உயர்தீப பூசை நெய்தேன்
உறுகிருத கம்பளந் தயிர்இவைக் குறுபலன்
ஓங்கு சீர்சா லோக்கியம்
பெறுமிட்ட சித்தியரி நாசம்பி ரீதியாம்
பெருகுதனம் மதிப லமுடன்
பெரியபழி கெடுமாயுள் ஆரோக்கி யம்மகப்
பேறுசேய் உதவும் என்றாய்
சிறுபொழுதும் உன்னையக லாதுநற் பூசைபுரி
தில்லைமூ வாயிர வர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.