உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

அரங்கநாதபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

திட்டக்குடி: வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திட்டக்குடி அடுத்த  வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்றுமுன்தினம் மாலை வாஸ்துசாந்தி  பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பூஜைகளை வரதசிங்காச்சாரியார் நடத்தினார். வரும்  ஜூன் 1ம் தேதி விசாக திருத்தேர் விழாவும், 2ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முருகன், தக்கார் ஜெயசி த்ரா, மற்றும் பட்டாச்சாரியார் ராகவன், கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !