உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழா!

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழா!

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாவில் ரதம், பல்லக்கு வீதி உலா நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப்(பெரிய பள்ளிவாசல்) 192ம் ஆண்டு கந்தூரி விழா துவங்கியது. பகல்  3.30 மணிக்கு இரதம், பல்லக்கு ஊர்வலம் துவங்கியது. பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இரதம், பல்லக்குகள்  பள்ளிவாசல் வழி யாக லெமர் வீதி,பாரதியார் சாலை,திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.வரும் ஜீன் 6ம் தேதி ஹலபு என்னும் போர்வை வீதி ஊர்வலமும், இரவு மின்சார சந்தனக்கூடு  புறப்பாடு, சந்தனம் பூசுதல் நடக்கிறது. ஜுன் 9ம் தேதி கொடி இறக்குதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !