தீவனூர் கோவிலில் இன்று கருடசேவை!
ADDED :3910 days ago
திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் இன்று மாலை கருடசேவை உற்சவம் நடக்கிறது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவி லில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த 25 ம் தேதி காலை துவங்கியது. இன்று 5ம் நாள் உற்சவமாக, மாலை கருட சேவை நடக்கிறது. வரும் 31ம் தேதி மாலை 7:00 மணிக்கு திருக்கல்யாணமும், 2ம் தேதி காலை காலை 8:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கவுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்து வருகிறார்.