உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் ரூ. 28 லட்சம் காணிக்கை!

மேல்மலையனூர் கோவிலில் ரூ. 28 லட்சம் காணிக்கை!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 28 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மோகனசுந்தரம், பிரகாஷ் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர்.

இதில் 28 லட்சத்து 89 ஆயிரத்து 605 ரூபாய் ரொக்கமும், 102 கிராம் தங்க நகையும், 293 கிராம் வெள்ளி நகையையும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். ஆய்வாளர் கோவிந்தராஜ், அறங்காவலர் தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர் மற்றும் அறங்காவலர்கள், மேலாளர்கள் முனியப்பன், மணி அலுவலக எழுத்தர் சண்முகம் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !