உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வார்ச்சனையின் பயன்!

வில்வார்ச்சனையின் பயன்!

செனனமூன் றிற்செய்த பாதகம் ஒழிக்குமுன்
சென்ற குலம் எழு மூன்றையும்
சிவபுரத் துய்க்கும்ஐ யாயிரம் கரிகளொடு
செப்ப ருங்கபி லைகோடி
வினவுசுப லட்சண மிகுந்தகன் னிகைகோடி
வேண்டிய பயனு தவுமேன்
மேதகும் சாளக்கி ராமமா யிரமுதவல்
விரிதட மீரைந் துகோடி
கனகமகம் ஆயிரம் கோடிபுரி பயனுநற்
கதிபெற விரும்பி னுமெமைக்
கருதியுள் ளன்பொடொரு கூவிளம் சாத்தியே
கசிந்தவர்க்கு எய்தும் என்றாய்
தினமுமுன தாயிரம் திருநாம அர்ச்சனைகள்
செய்தூமூ வாயிர வர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !