ராஜகோபால சுவாமி யானை வாகனத்தில் வீதியுலா!
ADDED :3776 days ago
விருத்தாசலம்: வைகாசி விசாக பிரம்மோற்சவஆறாம் நாள் உற்சவத்தில், ராஜகோபால சுவாமி யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில்
வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை வெண்ணெய்த்தாழி கண்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் உலா, பகல் 12:00 மணிக்கு திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு ராஜகோபால சுவாமி சமேத கோலத்தில், யானை வாகனத்தில் முக்கிய வீதிகள்வழியாக வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.