உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா!

ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா!

தர்மபுரி: தர்மபுரி, எஸ்.வி., ரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை (7ம் தேதி) நடக்கிறது. 6.6.15 காலை, 6 மணிக்கு யாகசாலை பிரவேசம், கணபதி பூஜை, 11 மணிக்கு கும்பாபிஷேக அங்க ஹோமங்கள், வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை, 6 மணிக்கு வேத பாராயணம், 6.30 மணிக்கு சங்கீத நிகழ்ச்சி, இரவு, 8 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

(7ம் தேதி), காலை, 6 மணிக்கு விஷ்ணு காயத்திரி ஹோமம், ஸ்ரீ ராம தாரக மந்திர ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், மஹா சுதர்ஷ்ண ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஹரிவாயு ஸ்துதி ஹோமம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

வித்யாஸாகர மாதவ தீர்த்த ஸ்ரீ பாதங்கள் தலைமை வகித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு டான் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அர்சனை, மங்களஹாரத்தியும், 6.30 மணிக்கு அருள் தரும் ஆஞ்சநேயர் எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் ஆச்சார் சத்தியநாராயணன், குருசாமி கிருஷ்ணன், சம்பத்குமார், கண்ணன், சிவராஜ், ஆனந்த், பாலாஜி, கேசவன், ராகவேந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !