உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி!

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்தில் ஆதிகுருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குரு பூஜை நிறைவு விழாவில் நேற்று முன்தினம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதி குரு முதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் கு ருபூஜை பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டு குருபூஜை விழா கடந்த மே 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடந்தது. நிறைவு நாள்விழா நேற்று முன்தினம் குருஞானசம்பந்தர் பட்டினப் பிரவேசம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலையில் ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தருமபுரம் கல்லுõரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்.

மதுரை சுந்தரராமன் திருவுந்தியார் என்ற தலைப்பிலும், மதுரை குருசாமி தேசிகர் திருக்களிற்றுப்படியார் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். பின்னர் சொக்கநாதப் பெருமான் வழிபாடு, ஞானபுரீஸ்வரர் சுவாமி வழிபாடு, மதியம் 1 மணியளவில் மகேஸ்வர பூஜையும் நடந்தது. மாலை நடந்த விழாவில் ஆதீன கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கார் த்திகேயன் வரவேற்றார். உதவி பேராசிரியர் சிவ ஆதிரை ஆதீன அடியவர்கள் என்ற தலைப்பில் பேசினார். இரவு 7 மணியளவில் தருமை ஆதீன இசைப்புலவர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. தொடர்ந்து ஆதீன 26 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாதப்பெருமானை வழிபட்டு விட்டு ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் திருவுருவத்திற்கு குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் குருமுதல்வர் திருவுருவச்சிலையுடன் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. நான்கு வீதிகளிலும் குரு மகா சன்னிதானத்திற்கு பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.அதிகாலை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஞானகொலுக்காட்சி எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள்,திருவாவடுதுறை ஆதீன சுப்ரமணியன் தம்பிரான் சுவாமிகள், ஆதீன கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, தருமபுரம் ஆதீன கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் நாஞ்சில்பாலு உட்பட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !