ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தின சிறப்பு பூஜை!
ADDED :3931 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி தின சிறப்பு பூஜைகள் நடந்தது. காலபைரவ ருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்த பின், 108 வடை மாலை சாற்றி, அரளி பூ மாலைகளால் அலங்காரம் செய்தனர். ருத்தர மந்திரங்களை வாசித்து தேதபாராயினம் செய்து வைக்கப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.