வாத்தியங்களால் உபசாரம் செய்தல்!
ADDED :3818 days ago
அனகநின் திருமுன்மத் தளமுழங் கச்செயின்
அவர்க்கதிக சுகம ளிக்கும்
அயனுடைய தாளமது சோகமாற் றும்படகம்
அளவில்பா வம்த விர்க்கும்
வினவுபே ரிகைடக்கை காந்தரம் சர்ச்சரிகள்
வேவுகுட முழவும் அடைவே
மெய்த்திடம் பிரீதியொடு சுகம்இட்ட காமியம்
விளங்கு முத்தியு நல்குமால்
அனுதினம் நரம்புதுளை தோற்கருவி கோடிகம்
மணிக்குலமி குத்தல் விசயம்
ஆகும்வளை பகையறும்நி ருத்தவாத்திய நடமும்
ஆயுளவை யோங்கும் என்றாய்
தினமும்அதி ரியவொலிகள் எழுகடல் அடங்கஎழு
தேவதுந் துபியி னோங்கும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.