திருவள்ளூர் குரு பகவானுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்!
ADDED :3769 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் உள்ள கோவில்களில், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தன. திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதே போல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.