அழகுக்கு மூன்று மந்திரம்
ADDED :5242 days ago
தெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்ற பெயர் வருகிறது. சிவனுக்கு கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர் என்ற பெயர் உண்டு. திருமால் சுந்தரராஜப்பெருமாள் என்ற பெயர் பெறுகிறார். ராமதூதனான அனுமன் இளமையில் மிக அழகாக இருப்பார். இதனால் இவரது தாய் அஞ்சனை தன் மகனை சுந்தரா என அழைத்து மகிழ்வார். இந்த மூன்று சுந்தரர்களின் நாமங்களான ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய நமஹ, ஸ்ரீராம ஜெயம் ஆகியவற்றை தினமும் சொல்லி வருபவர்களுக்கு முகப்பொலிவு உண்டாகும் என்பது நம்பிக்கை.