நினைத்தது நடக்கும்!
ADDED :3877 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை என்ற தலத்தில், மலைமீது ஸ்ரீநிவாஸர் எழுந்தருளியுள்ளார். உற்சவர், ஆண்டாள் கோயிலிலேயே இருப்பார். விழாக்காலங்களில் மட்டும் மலைக்கு எழுந்தருளுவார். மூலவர் ஸ்ரீநிவாஸர், விவசாயிகளின் கடவுளாகப் போற்றப்படுகிறார். நெல், பருத்தி எனப் பலவகை விளைப்பொருட்கள் இங்கு பகவானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.