உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 27 ல் வருஷாபிஷேகம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 27 ல் வருஷாபிஷேகம்!

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 27 ல் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடக்கவுள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தை மாதம் உத்திர நட்சத்திரத்திலும் தினத்திலும், கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட அனுசம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடக்கும். இதில் வரும் ஜூன் 27 ல் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடக்கவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்ரூபம், மற்ற கால வேளை பூஜைகள் நடக்கவுள்ளது. காலை 7 மணிக்கு தங்க கொடிமரத்தின் அருகில் புனித நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். பின் கலசங்கள் கோயில் விமானத்திற்கு எடுத்து செல்லப்படும். சண்முகர் விமானத்திற்கு சிவாச்சாரியார்களும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு பட்டாச்சாரியார்களும் புனித நீர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வாணையுடன் தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியத்து வீதியுலா நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !