உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. ரிஷிவந்தியத்தில்  உள்ள பழமை வாய்ந்த  அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 21ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து 22ம்  தேதி இரவு 8:15 மணியளவில், கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும் இரவு  9:00 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 28ம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 30ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !