தஞ்சை பெரியகோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்னம்!
ADDED :3865 days ago
தஞ்சாவூர்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் உள்ள நடராஜர் ஸ்வாமிக்கு, ஆனித்திருமஞ்னத்தையொட்டி பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர் ரெங்கராஜன் ஆகியோர் செய்தனர்.