சூலூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :3786 days ago
சூலூர்: அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 28ம் தேதி முனி விரட்டுதலுடன் துவங்கியது. 29ம்தேதி இரவு 9:00 மணிக்கு கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று முன்தினம் காலை பெண்கள் மாவிளக்கு, பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி வந்தனர். பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர். அலங்கரிக்கப்பட்ட கரகங்கள் திருவீதியுலா வந்தன. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.