உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றங்கள் நீங்கும் நெறிகள்!

குற்றங்கள் நீங்கும் நெறிகள்!

கருதரிய பிரதோட காலத்தின் மஞ்சனக்
கமலநின் முடியி னாட்டில்
கனகுற்றம் ஒருபது பொறுத்தருள்வை பால்சதம்
கருதாயி ரம்த யிர்க்குக்
கிருதமொரு பதினாயி ரங்குற்ற நற்சுவை
கிளைத்தெழு கரும்பி லக்கம்
கிளர்பத்தி லக்கமது கோடிதெங் கிளநீர்
கிடைத்தசந் தனக்கு ழம்பிற்
பெருகவுனை யாட்டிடின் அனந்தம் அள வில்லாப்
பெரும்பிழைபொ றுத்தருள் வையப்
பெற்றியது போலுனது சதகமதில் எப்பிழை
பிறந்திடினும் நீபொ றுத்துத்.
திருவருள் சுரந்தெளிய நாயினும் கடையனென்
சிறுதமிழ்க்கு உகந்த ருளுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !