கருப்பசாமி அழைப்புப் பாடல்
ADDED :3706 days ago
அண்ணன் வாரார் தம்பி வாரார்காயாம்பு நீலமேக வண்ணன் வாரார்கச்சை மணி சலங்கை கலகல என்றே ஒலிக்கஈட்டி சமுதாடு பளபள என மின்னவேவாள் எடுத்து கச்சை கட்டி வாகானகுதிரை ஏறிசத்தியமாய் பாராளும் மன்னரெல்லாம் போற்றிநிற்கபாரோங்கும் பதினெட்டாம் படி கருப்பர்கூர் அரிவாள் மீதேறி நின்று விளையாடுவதற்குதேசத்து ஞாயமெல்லாம் தீர்ப்பதற்கு துடிகருப்பர்வம்பு செய்யும் கள்ளப்பிசாசுகளை ஓட்டிவைக்கவள்ளலைப்போல் தந்து உதவி ஏழைகளை ஆதரிக்கசேமம் குதிரைதனில் வேகவேகமாய் ஓடிவாரார்.