பாரதிபுரம் கோவிலில் ஊஞ்சல் ஊற்சவம்
ADDED :5462 days ago
புதுச்சேரி : கோவிந்தசாலை மெயின்ரோடு பாரதிபுரத்திலுள்ள உலகமுத்து மாரியம்மன் கோவிலில், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 4ம் தேதி துவங்கியது. 5ம் தேதி கரக புறப்பாடு மற்றும் கொடியேற்றல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருமங்கை மன்னாதன் மற்றும் அரங்கநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர். உற்சவ ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.