உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை!

ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை!

உளுந்தூர்பேட்டை:செங்குறிச்சி ஸ்ரீகனகவள்ளி நாயிகா சமேத ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், கருட சேவையில் சுவாமி வீதியுலா நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி ஸ்ரீகனகவள்ளி நாயிகா சமேத ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 39ம் ஆண்டு லட்சார்ச்சனை கருட சேவை மகோற்சவ விழா நடந்தது. 25ம் தேதி காலை 7:30 மணி, மாலை 4:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியும், ரகுவீர பட்டாச்சாரியாரின் உபன்யாசம் நடந்தது.அதனை தொடர்ந்து 11:30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட சேவையில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் மாணவிகளின் கோலாட்டம், நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சவுந்தரராஜ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !