கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை!
ADDED :3725 days ago
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஏகாந்த சேவை புறப்பாடு நடந்தது. சிறப்பு பூஜையில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி நரசிங்கப்பெருமாள் கோயிலிலும், ஏகாதசி விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.