தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபலம் உண்டாகுமா?
ADDED :3716 days ago
திருமணம், புத்திரப்பேறு, தொழில் வளம், பொருளாதாரம் சிறக்க குரு பகவானின் அருள் தேவை. இதையே குருபலம் என்று குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் ஒன்றான இவருக்கு தேவகுரு என்று பெயர். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இவர் பெயர்ச்சியாகிறார். சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி உலக குருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உலக குருவை வழிபட்டால், தேவகுருவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.